We say what we believe |
|
Contents Brahmin Today - June 2008 பிராமின் டுடே - ஜூன் 2008 அட்டவணை |
||
|
Editor: Vasan
Web Master: Favorites
Achalam.com |
பாரதி பக்கம்பாஞ்சாலி சபதம் என்னும் பைந்தமிழ் காவியத்தின் செயல் களமாகத் திகழும் அஸ்தினாபுரத்தை வர்ணிக்கும் பாரதியின் முதல் பாடலே இக்காவியத்தின் போக்கினை உணர்த்தும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. ஊர், பேர் சூழ்நிலைகளை உரைக்கும் விதமாக வர்ணனை செய்யும் வரகவி பாரதி அதனூடே வெளிப்படுத்தும் பல்வேறு நுண்ணிய உணர்வுகள் பாஞ்சாலி சபதம் முழுவதும் ஆங்காங்கே பரவிக்கிடக்கின்றன.காவிய இலக்கணப்படி கதைக் களத்தைச் சிறப்பான ஒன்றாகச் சீர்தூக்கிக் காட்டும் விதமாக அஸ்தினாபுரத்திற்கு இணையாக அகிலத்தில் வேறு நகரம் இல்லை. அங்கு முத்தொளிர் மாடங்கள் பல உள்ளன. மலர் நிறைந்த சோலைகளும் வாவிகளும் மிகுந்துள்ள அந்நகரத்தில் வாழும் பெண்கள் ரதி தேவிக்கு ஒப்பானவர்கள். அந்தணர் வீதிகளும் அங்கு எப்போதும் நிகழும் வேள்விகளும் ஒலிக்கும் இடைவிடாத மந்திரங்களும் இடையிடையே நடைபெறும் வாதப் பிரதிவாத விவாதங்களும் அஸ்தினாபுரத்தை ஒரு அழகான நகரமாக நம்முன்னே கொண்டு நிறுத்தும் அமரகவி பாரதியின் அடுத்து வரும் வரிகள் அவன் நமக்கு எடுத்துக்காட்டும் ஒரு அருமையான நுண் கருத்தாக நம்முன் நிற்கின்றது. உலகத்தில் உண்மைக் கருத்துகளும் உயர்ந்த மனிதர்களும் இருப்பது மட்டுமின்றி, அதனிடையே அவற்றுக்கு நேர் எதிரான கருத்துகளும் அற்ப மனிதர்களும்கூட இருப்பது தவிர்க்க முடியாதது. தீ நடுவில் புகையும் தீஞ்சுவை பழங்களின் உள்ளே கருவண்டும் ரோஜாவின் அடியில் முட்களும் இறையாளர்களின் மத்தியில் இழிசெயல் புரிவோரும் இணைந்து இருப்பதுதான் உலக இயற்கை என்னும் தத்துவத்தை நல்முத்துகளாக மொழியும் இவ்வரிகள் மிக இனிமையானவை.
"மெய்த்தவர் பலர் உண்டாம் - வெரும் என்ற இந்த வரிகள் எக்காலத்திற்கும் எப்போதும் பொருந்தும் எழில் வரிகளாக நம்முன் நிற்கின்றன. காவியம் முழுவதும் கதாபாத்திரங்களின் வாயிலாக இது போன்ற காலக் கடிகாரத்திற்கு அப்பாற்பட்ட கணக்கற்ற கருத்து நேரங்களைக் கண்டு வியக்கும் நாம் இப்போது இப்பாடலைப் பார்ப்போம்.
முதலாவது - அழைப்புச் சருக்கம்
அத்தின புரமுண் டாம்; - இவ்
அந்தணர் வீதிக ளாம்; - மறை
மெய்த்தவர் பலருண் டாம்; - வெறும்
மாலைகள் புரண்டசை யும் - பெரு
ஆரிய வேன்மற வர், - புவி
நல்லிசை முழக்கங்க ளாம்; - பல |
|