We say what we believe |
|
Contents Brahmin Today - June 2008 பிராமின் டுடே - ஜூன் 2008 அட்டவணை |
||
|
Editor: Vasan
Web Master: Favorites
Achalam.com |
கலைவாணி துணைதிருவேங்கடவன் சரணப் பத்துவித்வான் வி. துரைசாமி. எம்.ஏ.
மூன்றொடு நான்காய் முகிழ்த்தமா மலைமேல் மூவுல குந்தொழு தேத்தக்
வேதவே தாந்த வித்தகத் துள்ளே விளைந்திடும் ஒண்பரஞ் சுடரே!
ஆடவர் பெண்மை அவாவுநின் றோளை அணைந்திட இராவணன் றங்கை
வல்வினை தீர்க்கும் வள்ளலே நின்றன் வாயிலில் படியெனக் கிடக்க,
அன்பருள் ளத்தை ஆலயங் கொள்ளும் அமரர்கட் கதிபனே சரணம்
முதலைவாய்ப் பட்ட மதகரி ஆதி மூலமே சரணமென் றழைக்க
பெற்றதாய் வரத்தைப் பேணிடக் கானில் பேசிடு மறைக்கப் படாத,
நந்தகோ பன்றன் மாளிகை யதனில் நளிர்மணித் தொட்டிலில் துயிலும்
கம்பநாட் டாழ்வார் கவிச்சக்ர வர்த்தி காகுத்தன் நின்பெருங் கதையை
பாயினைச் சுருட்டிக் கொள்ளெனப் பகர்ந்த பாவலன் மழிசையர் கோனின்
நெடும்பெருஞ் சிமைய வேங்கடத் துச்சி நின்றருள் நீலக்கற் கண்டே! திரு. வாஸன் அவர்களுக்கு, சுந்தரம் எழுதிக்கொண்டது. இத்துடன் திருவேங்கடவன் சரணப் பத்து என்ற கவிதையை அனுப்பி உள்ளேன். வித்வான் V. துரைசாமி M.A., (Retd Medura College Professor), சாகித்ய அகாடமி விருதினை சருகு எனும் கவிதைக்காகப் பெற்றவர்; காஞ்சி சுவாமிகள்மீது "உலா" எழுதிப் பரிசு பெற்றவர்; பொற்கிழி கவிதை எழுதிப் பரிசு பெற்றவர் "வைகைறை கனவு" என்னும் காவியத்தை மதுரை யுனிவர்ஸிடியார் B.A., B.Sc.க்கு பாடநூலாகப் பெற்றுள்ளனர்; கோனார் பப்ளிகேஷன்ஸ் இவரது பல நூல்களைப் பதிப்பித்துள்ளது. "அங்கயற்கண்ணி அனுபூதி" என்ற நூலை அருணகிரிநாதருக்குபின் அருளிச் செய்தவர்; பல கவியரங்கங்களிலும் பட்டிமன்றங்களிலும் கலந்துகொண்டவர்; இவரது புகழை அறியாத தமிழ் நூல் ஆசிரியர் இருக்க முடியாது. ஹிந்தியிலுள்ள துளசி ராமாயணத்தைத் தமிழாக்கம் செய்தவர். மதுவுர "சுக்ரிணி" சீத்தாராமன் ரூ. 25,000/- கொடுத்து இவரைக் கௌரவித்தார். இன்னும் எழுத்திலடங்காத பெருமை பெற்றவர். இவருக்கு வயது 85. மதுரையில் எல்லிஸ் நகரில் மகன் வீட்டில் இருக்கிறார். முகவரி M. 277, Elliys Nagar, Madurai 625 010. Phone No. 2601811, என். சுந்தரம் |
|