Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT64 Brahmin Today - June 2009 பிராமின் டுடே - ஜூன் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




பாரதி பக்கம்

துரியோதனன் பதில்

சூதாட்டத்திற்குப் பாண்டவர்களை அழைத்து அவர்களை நாதியில்லாமல் செய்யும் அந்தக் கெட்ட எண்ணத்தை மறந்துவிட்டு ஏது வேண்டுமானாலும் செய் என் மகனே என்று அன்புடன் பேசிய பாசமிகு தந்தையைத் தூசு எண்ண கருவி துரியோதனன் அளித்த பதில் நாம் இன்னும் நம்மிடையே காணும் சொற்களே ஆகும். தவிப்பில் நின்று தந்தையின் உணர்ச்சியைக் காட்டிய புவி போற்றும் ஆற்றல் கவி பாரதி திமிர் பிடித்துத் தான் எண்ணியதை மட்டும் தீவிரமாகச் செய்யத் துடிக்கும் மகனின் உணர்ச்சியையும் நம் மத்தியில் கொண்டு வருகிறான். “நான் சொல்வதை நீ கேட்டுத் தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் ஏன் என்று சொல்லாமல் உன் எதிரிலேயே நான் என்னை மாய்த்துக்கொள்வேன்” என்று வீம்பு பிடித்துத் தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் தருதலை பையன்களை நாம் இன்றும் காண்கிறோம். “நல்லது கெட்டது மட்டும் தெரிந்துகொண்ட நாம் அடையும் பயன் ஒன்றும் இல்லை. சொந்தப் புத்தியை பயன்படுத்தி மேலும் சொத்து சேர்க்காத மன்னர்கள் ஒரு தொனியில் சுவடு இல்லாமல் அழிந்துபோவார்கள்” என்று தந்தைக்கு உபதேசம் செய்த துரியோதனின் பதிலைத் தம் தங்க வரிகளில் நமக்குத் தடையப்படுத்தும் பாரதி “நீ அழைப்பதாக சொல்லும் வார்த்தையில்தான் பாண்டவர்கள் சூதுக்கு இசைவார்கள்” என்னும் கருத்தைத் தமக்கே உரிய சொற் பிரயோகத்தில் சுட்டிக்காட்டுகிறான் இணையில்லாத இறைகவி பாரதி.

தந்தை யிஃது மொழிந்திடல் கேட்டே
தாரி சைந்த நெடுவரைத் தோளான்,
எந்தை, நின்னொடு வாதிடல் வேண்டேன்
என்று பன்முறை கூறியுங் கேளாய்;
வந்த காரியங் கேட்டி; மற் றாங்குன்
வார்த்தை யின்றியப் பாண்டவர் வாரார்;
இந்த வார்த்தை யுரைத்து விடாயேல்,
இங்கு நின்முனென் னாவி யிறுப்பேன்.

‘மதித மக்கென் றிலாதவர் கோடி
வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியுஞ் சாத்திரத் துள்ளுறை காணார்,
பானைத் தேனி லகப்பையைப் போல்வார்;
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்
சுருதி யாமெனக் கொண்டனை நீதான்;
அதிக மோக மவனுளங் கொண்டான்
ஐவர் மீதிலிங் கெம்மை வெறுப்பான்.

‘தலைவ னாங்கு பிறர்கையிற் பொம்மை;
சார்ந்து நிற்பவர்க் குய்ந்நெறி யுண்டோ?
உலைவ லால், திரிதாட்டிர வர்க்கத்
துள்ள வர்க்கு நலமென்ப தில்லை;
நிலையி லாதன செல்வமு மாண்பும்
நித்தந் தேடி வருந்த லிலாமே
“விலையி லாநிதி கொண்டனம்” என்றே
மெய்கு ழைந்து துயில்பவர் மூடர்.

‘பழைய வானிதி போதுமென் றெண்ணிப்
பாங்கு காத்திடு மன்னவர் வாழ்வை
விழைவு மன்னிய ரோர்கணத் துற்றே
வென்ற ழிக்கும் விதியறி யாயோ?
குழைத லென்பது மன்னவக் கில்லை;
கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும்
பிழையொன் றேயர சர்க்குண்டு, கண்டாய்;
பிறரைத் தாழ்த்து வதிற்சலிப் பெய்தல்.

பூமாதா நூல் மதிப்புரை



Designed and maintained by AKR Consultants