- The Magazine for Brahmins
Reflections
மே மாத இதழில் பிராமணர்களும் இன்றைய கல்விமுறையும் கட்டுரையில் ஒரு உண்மைச் சம்பவம் என்று ஒரு பட்ட மேற்படிப்பு வளாக உணவு விடுதி பற்றியும் பிராமண மாணவர்களின் அவல நிலை பற்றியும் எழுதியிருந்தீர்கள். அதற்குத் தீர்வு எழுதவில்லையே. அதை எழுதினால்தானே மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நடைமுறைப்படுத்த வழிகாட்டுவதாக இருக்கும்.
சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் மனோதர்மத்தின் அடிப்படையில் ஆலாபனை செய்யும்போது மேலே பிடிக்க வேண்டிய நிலை வரும்போது தனக்குள் ஸ்ருதி நிற்காது என்று தெரிந்துவிட்டால் மேலே கையை உருட்டிக் காண்பித்துவிடுவார்கள். ரசிகர்கள் அவர்கள் ஞானத்திற்கேற்பப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்களும் தீர்வை எழுதாமல் விட்டிருப்பது அதைப் போல இருக்கிறது.
ஆழ்ந்த ஆய்வினடிப்படையில் தங்களது ஆதங்கம் வெளிப்பட்டிருக்கிறது. தொடர் முயற்சிக்குப் பாராட்டுகிறேன்.
ஏ.வி. கோபால தேசிகன்
குளித்தலை.
‘மரியாதை மஹோத்ஸவம்’ செய்தி படித்தேன். ஜைன தேராபந்த் பிரிவினர் மிகச் சிறப்பான முறையில் இதனை நடத்தித் தங்களுக்குள் ஒரு குருபரம்பரையின் குரு பக்தியினை வெளிப்படுத்திவருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
sparks கட்டுரை இன்றைய நமது சமூகத்திற்காகவே எழுதப்பட்ட அருமையான ஒன்று. பாராட்டுகள்.
ஏ.ஜெ. பாலசுப்ரமணியன், சென்னை
Ref. The jain gurus, your observation is 100% correct. we lack that urge, respect, importance and blind submission.The bitter fact is welack true gurus.Too many fake one's have eroded the faith in gurus and it has become a matter of comedy indeed.We need to focus in this direction and do something worthwhile to show the right direction to our youngsters.Again we need to cometogether to impliment effective ideas which practically is a herculian task. only with the blessings of our guru 'paramacharyal' we may succeed!
Mrs. C. Bagirathi, Sirmur, Himachala Pradesh
